எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு எதிராக திருச்செங்கோட்டில் தெறிக்க விட்ட பா.ஜ.க…!

எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு எதிராக திருச்செங்கோட்டில் தெறிக்க விட்ட பா.ஜ.க…!

Share it if you like it

‘ஜெய்ஹிந்த்’ என்ற சொல் தமிழக சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை முதல் பல சுதந்திர போராட்ட வீரர்களின் தாரக மந்திர சொல்லாக இருந்தது. இன்றும், என்றும், அந்த மந்திர சொல் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.  ‘வெல்க இந்தியா’ என்பதே இதன் பொருள்.

தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, கொங்கு நாடு கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் அவர்கள் அண்மையில் ‘ஜெய்ஹிந்த்’ என்னும், மந்திர சொல்லை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட செயல், இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை மக்கள் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த் அவமதிப்புக்கு பின்னால் தி.மு.கவின் தூண்டுதல் நிச்சயம் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு எதிராக திருச்செங்கோட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை பா.ஜ.கவினர் மேற்கொண்டனர் என்பதை தமிழக பா.ஜ.க தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.  

https://twitter.com/Murugan_TNBJP/status/1409863620226293765


Share it if you like it