சாவி தொலைந்து விட்டதா? இல்லை..! பெட்டியே தொலைந்து விட்டதா? விடியல் அரசு மீது சீமான் பாய்ச்சல்..!

சாவி தொலைந்து விட்டதா? இல்லை..! பெட்டியே தொலைந்து விட்டதா? விடியல் அரசு மீது சீமான் பாய்ச்சல்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு 100 நாட்களில் மக்களின் அனைத்து பிரச்சனையும் தீர்த்து விடுவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தார்.

  • நீட் தேர்வு ரத்து செய்வதில் தோல்வி.
  • பெட்ரோல், டீசல், விலை குறைப்போம் என்பதில் தோல்வி.
  • கொரோனா தொற்றில் இறந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவோம் என்பதில் தோல்வி.

இப்படி தோல்வி மேல் தோல்வி அடைந்து வரும் விடியல் அரசு மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக இவ்வாறு சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தி.மு.க தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
  • என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?

 


Share it if you like it