கம்யூ., கட்டிடத்தை இடித்த திமுக பிரமுகர் – அமைதி காக்கும் அருணன்

கம்யூ., கட்டிடத்தை இடித்த திமுக பிரமுகர் – அமைதி காக்கும் அருணன்

Share it if you like it

மதுரையில், நில ஆக்கிரமிப்பு போன்ற பல புகார்களில் தொடர்புடைய திமுக பிரமுகர் ஒச்சுபாலு என்பவர் அவருடைய ஆட்கள் மூலம். 70 வருடங்களாக செயல்பட்டு வந்த ‘தூக்குமேடை’ பாலு நினைவு படிப்பகத்தை இடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூக்குமேடை பாலு என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராளியாவார். அவரது பெயரில் செயல்பட்டு வந்த படிப்பகத்தை கூட்டணிக் கட்சியான திமுகவினரே இடித்ததால் உள்ளூர் சிபிஎம் பொறுப்பாளர்கள் சிலர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடமும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் போன்ற முக்கிய தலைவர்கள் இது வரை வாய் திறந்து ஒரு கண்டனம்… ஏன் “தோழமை சுட்டு” கூட தெரிவிக்காதது கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it