தமிழத்தில் தொடர்ந்து மர்ம நபர்களால் கோவில் சிலை உடைப்பு

தமிழத்தில் தொடர்ந்து மர்ம நபர்களால் கோவில் சிலை உடைப்பு

Share it if you like it

தமிழகத்தில் தொடர்ந்து மர்ம நபர்களால் சாமி சிலைகள் உடைப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அது போல் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பாக்கம் ஏரியில் ஆலமரத்தின் கீழ் ஏழு அடி உயர அம்மன் சிலை ஒன்று உள்ளது‌. நேற்று முன்தினம் இந்த சிலையின் வலது, இடது கை மற்றும் கிரீடம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் இன்று அங்குள்ள 3 அடி உயரம் உள்ள அம்மன் சிலையிலும் வலது, இடது கையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இதுபோன்ற கோவில் சிலைகளை உடைப்பது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் துறையிடம் ஊர் மக்கள் புகார் அளித்தனர்.


Share it if you like it