அமைச்சருக்கு தரமான பதிலடி கொடுத்த பா.ஜ.க.!

அமைச்சருக்கு தரமான பதிலடி கொடுத்த பா.ஜ.க.!

Share it if you like it

தனக்கு காது கேட்கவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் சைகை மூலம் தெரிவித்த அமைச்சர் சேகர் பாபுவிற்கு புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் தரமான பதிலடியை கொடுத்து இருக்கின்றனர்.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நீலகிரி எம்.பி.யுமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், அக்கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவர். கடந்த, சில தினங்களுக்கு முன்பு இவர் கலந்த கொண்ட நிகழ்ச்சியில் ஹிந்துக்களை மிக இழிவாக விமர்சனம் செய்து இருந்தார். இவரின், கருத்து ஹிந்துக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர் ஆ. ராசா பேசியது குறித்த கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் பதில் அளிக்க வேண்டிய அவர், தனக்கு காது கேக்காது என்பது போல சைகை மூலம் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் மீண்டும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், காது கேட்காத அமைச்சர் சேகர் பாபுவின் நிலையை உணர்ந்த புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் சுமார் ரூ. 7,000 மதிப்பிலான புதிய காது கேட்கும் கருவியை தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். காது கேட்காத சினேக் பாபுவிற்கு முட்டையும், பாலும் அனுப்பி வைத்து இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

One thought on “அமைச்சருக்கு தரமான பதிலடி கொடுத்த பா.ஜ.க.!

  1. ஏன் இப்படி ஏழாயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவியை வாங்கி அனுப்பி உங்கள் பணத்தை வீணாக்கி விட்டீர்களே.. சுரணையுள்ள உள்ளங்கள் என்றால் பரவாயில்லை. சுருட்டுகிற ஜன்மங்கள் அல்லவா அவர்கள். அவர்கள் வீதிக்கு வந்தால் சாணியை குறைச்சு ஊத்தினால் எல்லாம் கேட்கும்

Comments are closed.