கடலில் மூழ்கிய 4 இளைஞர்கள்: ஹீரோவாக மாறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

கடலில் மூழ்கிய 4 இளைஞர்கள்: ஹீரோவாக மாறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

குஜராத்தின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரஜூலா ஹிரா சோலங்கி கடலில் தத்தளித்த மூன்று பேரை உயிருடன் மீட்ட காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கல்பேஷ் ஷியால், விஜய் குஜாரியா, நிகுல் குஜாரியா மற்றும் ஜீவன் குஜாரியா ஆகிய நான்கு இளைஞர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை ) பிற்பகல் ராஜுலாவில் உள்ள பட்வா கிராமத்திற்கு அருகிலுள்ள கடல் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் பலத்த நீரோட்டம் மற்றும் கடுமையான அலைகள் வீசியுள்ளது.

இதன் காரணமாக, நான்கு இளைஞர்களும் ஆழமான இடத்திற்கு அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து, நான்கு பேரும் உயிருக்கு போராடி இருக்கின்றனர். அப்போது, அவர்களின் கூக்குரல் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடற்கரையில் நின்றி கொண்டிருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கடலில் குதித்து மூன்று இளைஞர்களை உயிருடன் மீட்டு இருக்கிறார். எனினும், ஒரு இளைஞரை மட்டும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் காப்பாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it