கர்நாடக மாநிலம் மண்டியா அருகிலுள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த 28-ம் தேதி 108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி ஏற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் கொடி அகற்றப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், ”பெங்களூரு சிவாஜி நகரில் 100 ஆண்டு பழமையான மின் கம்பத்தில் பச்சை நிற முஸ்லிம் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அதை உடனடியாக அகற்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டும்” என்று பாஜக எம்எல்ஏ பசன கவுடா எத்னால் வலியுறுத்தினார்.
இதையடுத்து சிவாஜி நகர் சாந்தினி சவுக், ரசூல் மார்க்கெட், பிராட்வே சாலை ஆகிய இடங்களில் பச்சை நிற முஸ்லிம் கொடிகள் நேற்று அகற்றப்பட்டன.