நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரையும், மசினகுடி, கல்குவாரி அருகே , மாடு மேய்த்துக் கொண்டிருந்த , குறும்பர் பாடியை சேர்ந்த , மங்களபசுவன், 85, என்பரை தாக்கி கொன்ற புலியை சுட்டு கொல்ல வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் தமிழக அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில். ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல கூடாது என்று பல சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல பாஜக கட்சி விரும்பவில்லை எனவும், அப்புலியை பத்திரமாக பலரின் விருப்பத்துடன் வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அவர்கள் கேட்டு கொண்டு உள்ளார்.