மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி !

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி !

Share it if you like it

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடல் போல் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவித்தார்.

மேற்கு வங்க மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சந்தேஷ்காலி சம்பவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை ஆதரிப்பதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பக்கம் மாநில அரசாங்கம் இருப்பதாக கூறினார்.

நீதி கேட்டு பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது மேற்குவங்க மாநில பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேற்கு வங்க மக்களை ஏழைகளாக வைத்திருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

மத்திய அரசு ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு உதவிகளை வழங்குகிறது. ஆனால், மேற்கு வங்க மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. காரணம், அதற்கான அனுமதியை மம்தா அரசு வழங்க மறுக்கிறது. மேற்கு வங்கத்தின் மருத்துவ நிலையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 2014-க்கு முன், வங்கத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 26 ஆக அதிகரித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் அரசு வங்கப் பெண்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது. ஆனால், பெண்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி முறையால் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்தேஷ்காலியில் பெண்கள் நீதி கேட்டு போராட்டங்களை நடத்தியபோதும், அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. வங்கத்தில், ஒரு குற்றவாளி எப்போது கைது செய்யப்பட வேண்டும் என்பதை காவல்துறை முடிவு செய்வதில்லை, குற்றவாளி தான் எல்லாவற்றையும் தானே தீர்மானிக்கிறார். சந்தேஷ்காலி சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை மாநில அரசு விரும்பவில்லை.

மேற்கு வங்க மக்கள் தொடர்ந்து டிஎம்சிக்கு வாக்களித்துள்ளனர், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராக மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் வங்கத்துக்கு இருந்த புகழை திரிணமூல் காங்கிரஸ் கெடுத்துவிட்டது. இது ஒவ்வொரு திட்டத்தையும் ஒரு மோசடியாக மாற்றுகிறது. அவர்கள் எங்கள் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதை அவர்களுடையது என்று அழைக்கிறார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான எண்ணற்ற வாய்ப்புகளை பாஜக உருவாக்கும். இதற்கு, மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.


Share it if you like it