முரசொலியை வெளுத்து வாங்கிய பா.ஜ.க துணைத் தலைவர்!

முரசொலியை வெளுத்து வாங்கிய பா.ஜ.க துணைத் தலைவர்!

Share it if you like it

மதுரை ஆதீனத்தை மிரட்டும் வகையில் செய்தி வெளியிட்ட முரசொலியை பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் வெளுத்து வாங்கியுள்ளார்.

விடியல் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் அட்டூழியங்கள், கழக கண்மணிகள் செய்து அடாவடிகள் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர, ஹிந்து ஆலயங்கள் இடிக்கப்படும் கொடூர சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுதவிர, ஹிந்து தெய்வங்களை தொடர்ந்து நிந்திக்கும் போக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், ஹிந்து விரோத தி.மு.க அரசுக்கு எதிராக மதுரை ஆதீனம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால், கடும் உஷ்ணம் அடைந்த தி.மு.க மதுரை ஆதீனத்தை மிரட்ட துவங்கியுள்ளது. அதனைமெய்ப்பிக்கும் வகையில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரை ஆதீனத்தை மிரட்டும் தோணியில் பேசியிருந்தார்.

இதனிடையே, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையால் ’டாய்லெட் பேப்பர்’ என்று அழைக்கப்பட்ட ’முரசொலி மதுரை ஆதீனத்தை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்கு, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

நாராயணன் ட்விட்டர் பதிவு இதோ.

இன்றைய முரசொலியின் மூலம் மதுரை ஆதீனத்தை மீண்டும் மிரட்டியுள்ளது திமுக. ‘பிரதமர் மோடியிடம் செல்வேன், அமித்ஷாவிடம் செல்வேன்’ என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக பயந்து அலறியிருக்கிறது முரசொலி. ‘மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்று குறிப்பிட்டு அப்பட்டமாக மிரட்டலை விடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தி மு க வை சேர்ந்தவர்கள், மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை வளைக்க பார்க்கிறார்கள் என்று ஆதீனம் நேரடியாக உண்மையை உலகத்திற்கு சொன்னதால் துடி துடித்து போயுள்ளது தி மு க. பொது அமைதிக்கு ஊறு தேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை – அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க இயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் மதவெறி பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதீனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.

‘யூ டூ ப்ருட்டஸ்’ என்ற யூ டியூபில் சிவபெருமானை இழிவுபடுத்திய நபரை கைது செய்ய துணிவில்லாத தி.மு.க, மதுரையில் செஞ்சட்டை பேரணியில் கிருஷ்ண பகவானை அவதூறாக பேசி கோஷமிட்ட வன்முறை கும்பலை கைது செய்ய வக்கில்லாத தி.மு.க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒழிப்பேன் என்று பொது வெளியில் ஓலமிட்ட அமைச்சர் அன்பரசனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்ய முடியாத தி.மு.க, அண்ணாமலையின் கைகளை வெட்டுவோம் என்று வன்முறையை தூண்டிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத தி.மு.க, ஹிந்து மதத்தை ஒழிப்பேன் என்று மேடை தோறும் முழங்கும் திருமாவளவனை அடக்க துணிவில்லாத திமுக, நில அபகரிப்பை செய்யும் தி.மு.கவினரை தட்டி கேட்ட ‘சாது’ மதுரை ஆதீனத்தை மிரட்டி பார்ப்பது கோழைத்தனமான செயல் என்பதை உணர வேண்டும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழைய மொழி. ‘சாது கொதித்தெழுந்தால் அரசு தாங்காது’ என்பது புதிய மொழி.

முரசொலியின் வார்தைகளில் குறிப்பிட வேண்டுமென்றால், தி மு க எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. ஹிந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளை அவதூறு செய்வதன் மூலம் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் கயவர்களை தண்டிக்காமல் இருக்கும் தி.மு.கவை, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.கவை, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அமைச்சர்களே வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அனுமதிக்கும் தி.மு.க.வை , ஹிந்து மதத்திற்கெதிராக அவதூறு பேசும் கூட்டணி கட்சியினரை அடக்க முடியாமல் ஊழலில் ஊறி திளைக்கும் தி.மு.கவை இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது பா.ஜ.க சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை தி.மு.க புரிந்து கொள்ள வேண்டும்.


Share it if you like it