கொண்டாட்டம் தவிர்த்து தொண்டாற்றும் பா.ஜ.க..!

கொண்டாட்டம் தவிர்த்து தொண்டாற்றும் பா.ஜ.க..!

Share it if you like it

‘மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற, பா.ஜ.,கவின் ஏழாம் ஆண்டு நிறைவு நாளை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் முருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்:

பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பை கடந்த 2014ம் ஆண்டு ஏற்றது, வரும் 30-ம் தேதியோடு, ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே, அந்நாளை தமிழக பா.ஜ.கவினர் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக கொண்டாட வேண்டும்.

ரத்ததான முகாம்கள், தடுப்பூசி விழிப்புணர்வு முகாம், மக்களுக்கு தேவையான உதவிகள் என, பலவித சேவைகளை ஓட்டுச்சாவடி அளவில் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுதும், அந்த கிராமத்தில் சேவையாற்ற வேண்டும்.

அதே சமயத்தில், நாம் ஏற்கனவே செய்து வருகிற, ஏழை மக்களுக்கு, உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்குவதும் தொடர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது


Share it if you like it