மூன்று மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் பாஜகவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு பாஜகவினர் இனிப்புகளை கட்சிகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் கணேசன் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி சங்கீதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பி கே சிவா நகர பொதுச்செயலாளர் பெருமாள் மற்றும் நகர நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.