நீண்ட தூரம் சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் !

நீண்ட தூரம் சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் !

Share it if you like it

இந்திய விமானப்படை நேற்று பிரம்மோஸ் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணையானது 400-500 கி.மீ சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று 1500 கிலோ மீட்டர் தூரம் சென்று தரைவழி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரமோஸ் ஏவுகணை விமான நிலையத்திலிருந்து வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதியில் உள்ள விமான தளத்திற்கு போர் விமானம் SU-30MKI மூலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த சோதனையானது கடந்த முறை நிகழ்த்திய சோதனையைவிட மிக அதிக தொலைவு என்றும், மேலும் இந்தத் திறனுடன், IAF இப்போது கடல் அல்லது நிலத்தில் உள்ள அதிக மதிப்புள்ள இலக்குகளைத் தாக்க முடியும். Su-30MKI இன் உயர் செயல்திறனுடன் இணைந்த ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு திறன் IAF க்கு ஒரு மூலோபாய விளிம்பைக் கொடுத்துள்ளது என்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Share it if you like it