ஹிந்து இளைஞரை காதலித்த தங்கை… தலையை துண்டித்து போலீஸில் சரணடைந்த அண்ணன் ரியாஸ்!

ஹிந்து இளைஞரை காதலித்த தங்கை… தலையை துண்டித்து போலீஸில் சரணடைந்த அண்ணன் ரியாஸ்!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹிந்து இளைஞரை காதலித்த தங்கையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, துண்டித்த தலையோடு போலீஸில் சரணடைந்த அண்ணனால் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி. மாநிலம் லக்னோ மாவட்டம் பாரபங்கி அருகேயுள்ளது ஃபதேபூர் பகுதி. இதன் அருகேயுள்ள மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவரது தங்கை ஆஷிஃபா. இவர், அதே கிராமத்தில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரை காதலித்து வந்தார். இது ரியாஸுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஆஷிஃபாவை பலமுறை கண்டித்திருக்கிறார். இதனால், அண்ணன் தங்கைக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த ஆஷிஃபா, காதலன் சந்த்பாவுடன் சேர்ந்து அண்மையில் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஆஷிஃபாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆஷிஃபாவை மீட்டு வந்த போலீஸார், சந்த் பாபுவை சிறையில் அடைத்தனர். இதன் பிறகாவது ஆஷிஃபா மனம் மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தனது காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். அதாவது, ஆஷிஃபாவுக்கு 18 வயது நிறையவில்லை. எனவே, தான் மேஜரானதும் சந்த் பாபுவுடன் செல்லப் போவதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்குமிடையை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ், கத்தியால் ஆஷிஃபாவின் கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர், ஆஷிஃபாவின் துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனால், வழியிலேயே ​​போலீஸார் அவரை கைது செய்தனர். இதன் பிறகு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், ரியாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதெல்லாம் கவுரவக் கொலை கணக்கில் வராதா ஆபீஸர்ஸ்…


Share it if you like it