CAA போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துங்கள் – உயர்நீதிமன்றம்  உத்தரவு

CAA போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி கோபிநாத் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு
அனுமதியின்றி போராட்டம் நடத்தும் அனைவரையும் அப்புறப்படுத்துமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.இந்த உத்தரவிற்கு ABVP உள்ளிட்ட மாணவர் அமைப்பினர், மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்


Share it if you like it