ஜாதி பெயரை சொல்லி  நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி  சிறுநீர் கழித்து உச்சகட்ட கொடூரம் !

ஜாதி பெயரை சொல்லி நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்து உச்சகட்ட கொடூரம் !

Share it if you like it

திருநெல்வேலி மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மனோஜ் குமார், மாரியப்பன் ஆகியோர் கடந்த 30-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கஞ்சா பாேதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கஞ்சா மற்றும் மதுபோதையில் வழிமறித்து என்ன சாதி என கேட்டு பட்டியலின சமூகத்தினர் என தெரிந்ததும் அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது சிறுநீரை கழித்துள்ளனர். அவர்களை தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்துள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள் நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, ஆயிரம், நல்லமுத்து, ராமர், சிவா, லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது வன்கொடுமை வழக்கு, வழிபறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it