மக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !

மக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !

Share it if you like it

மிக்ஜாம் புயலின் காரணமாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு வரை, கனமழையும், காற்றும் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும், தங்கள் பணிகள் அனைத்தையும் ஒரு நாள் ஒத்தி வைத்து, பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு உதவுவதற்காக, தமிழக பாஜக சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாஜக சகோதரர்களும், நிர்வாகிகளும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை வரும் ரயில்கள், மழை காரணமாக, புறநகர் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ரயில் பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் இயன்ற வரையில் செய்து தர தமிழக பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் அனைவரும் இந்தக் கடினமான நேரத்தில் மிகக் கவனத்துடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it