முரசொலி நிலம் தொடர்பான வழக்கு : ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

முரசொலி நிலம் தொடர்பான வழக்கு : ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

Share it if you like it

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முரசொலி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க, எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் வழக்கறிஞர் வில்சனும், புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரவியும் ஆஜரானார்கள்.

இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று (10ம் தேதி) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தீர்ப்பளித்துள்ளார். அந்தத் தீர்ப்பில், ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடரலாம். அதேபோல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் விளக்கம் பெற்று உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை கேட்டு, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Share it if you like it