தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் கர்நாடக அரசு தர மறுத்துவருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. எனவே தமிழகத்திற்கு தேவையான உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விரிவான அறிக்கை தர காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காவிரி நீர் இருப்பு மழைப்பொழிவு உள்ளிட்ட விவரங்களையும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துகிறதா?என்ற தகவலையும் செப்டம்பர்-1 தேதிக்குள் விளக்கமாக தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்துள்ளது.