தமிழில் மத்திய ஆயுதப்படை தேர்வு : பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.!

தமிழில் மத்திய ஆயுதப்படை தேர்வு : பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.!

Share it if you like it

மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்துவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. இது நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள், அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், மத்திய ஆயுதப் படைகளில் அவர்களின் அதிக பங்களிப்பை உறுதி செய்யவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும். இதற்காக முயற்சி எடுத்த மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் தமிழ் மீதான பிரதமர் மோடியின் அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது என்றும் உண்மையான உணர்வை மேலும் மேம்படுத்துகிறது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it