13 வயது சிறுமி பலாத்காரம்: 57 வயது சர்ப்ராஸ் கான் கைது!

13 வயது சிறுமி பலாத்காரம்: 57 வயது சர்ப்ராஸ் கான் கைது!

Share it if you like it

சத்தீஸ்கரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 57 வயது சர்ப்ராஸ் கானை போலீஸார் கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் கோட்வாலி காவல் நிலைய பகுதியில் வசித்து வருபவன் சர்ப்ராஸ் கான். 57 வயதாகும் இவன், டிரைவராக பணிபுரிந்து வருகிறான். இவனுக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு, 13 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சூழலில், அச்சிறுமி கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சர்ப்ராஸ் கான், சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். பிறகு, அச்சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஆனால், இச்சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார்.

எனவே, சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், மறுநாள் சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதோடு, காய்ச்சலும் இருந்திருக்கிறது. ஆகவே, சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகு, சிறுமியிடம் கேட்டதற்கு நடந்த சம்பவங்கள் குறித்து கூறியிருக்கிறார். மேலும், இதற்கு முன்பும் சர்ப்ராஸ் கான் தன்னிடம் இதேபோல தவறாக நடந்து கொண்டதாகவும், வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய தகவலையும் கூறியிருக்கிறார். இதையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சர்ப்ராஸ் கானை கைது செய்தனர்.


Share it if you like it