இந்து அன்னையர் முன்னணி சார்பில் முப்பெரும் விழா!

இந்து அன்னையர் முன்னணி சார்பில் முப்பெரும் விழா!

Share it if you like it

இந்து அன்னையர் முன்னணி சார்பில், சென்னையில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

சென்னை மாநகர இந்து முன்னணியின் கிளை அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பில், சுவாமி விவேகானந்தர் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஜெயந்தி விழா, பசுத்தாய் மாத இதழின் பொங்கல் மலர் 2023 மற்றும் சாதனை பெண்கள் மலர் வெளியீட்டு விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா மற்றும் கோமாதா பூஜை ஆகிய முப்பெரும் விழாக்கள் இன்று மாலை சென்னை மணலி சீனிவாசன் தெருவிலுள்ள வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில், எழுத்தாளர்கள் திருப்பூர் நளினி, அரக்கோணம் பொன்.முரளி ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டன. ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் சுவாமினி மாதாஜி நூலை வெளியிட, பிரபல கர்நாடக மற்றும் திரை இசை பாடகி, கலைமாமணி விருது பெற்ற டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் பெற்றுக்கொண்டார். இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஜி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், சிறுமி சி.கிரியா தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. விழாவில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மேலும், இந்து முன்னணி பிரமுகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


Share it if you like it