ஹிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் சுபேர் உசேன் கைது!

ஹிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் சுபேர் உசேன் கைது!

Share it if you like it

தனக்கு திருமணமானதை மறைத்ததோடு, ஹிந்து சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த சுபேர் உசேனை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபேர் உசேன். இவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இவர், ஆவடி பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். அதே கடையில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவரும் பணிபுரிந்து வந்தார். ஒரே கடையில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறியிருக்கிறார் சுபேர் உசேன். ஆனால், தனக்கு திருமணமான விஷயத்தை அச்சிறுமியிடம் சொல்லவே இல்லை. எனவே, சுபேர் உசேனை நம்பி அச்சிறுமியும் பழகி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 5 தினங்களுக்கு முன்பு அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார் சுபேர் உசேன். பின்னர், தனியாக வீடு எடுத்து அச்சிறுமியை தங்க வைத்தவர், அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்திருக்கிறார். இதனிடையே, சிறுமியைக் காணாததால் அவரது பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடி இருக்கிறார்கள். எங்கும் கிடைக்காததால் திருநின்றவூர் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுபேர் உசேனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை சுபேர் உசைன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it