வீடு கட்ட லஞ்சம் கேட்டு தி.மு.க. பிரமுகர் மிரட்டல்!

வீடு கட்ட லஞ்சம் கேட்டு தி.மு.க. பிரமுகர் மிரட்டல்!

Share it if you like it

வீடு கட்ட லஞ்சம் கேட்டு தி.மு.க. பிரமுகர் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 137-வது வார்டு நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவகுமாரன். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்த சூழலில், தி.மு.க. வார்டு துணைச் செயலாளரான தணிகாசலம், வீடு கட்டுவதற்கு லஞ்சம் கேட்டு தேவகுமாரனுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். ஆனால், தேவகுமாரன் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் பொதுவெளியில் தரக்குறைவாக திட்டி இருக்கிறார் தணிகாசலம்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றிருக்கிறார் தேவகுமாரன். ஆனால், புகார் வாங்க மறுத்த போலீஸார், தேவகுமாரனை மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. பிரமுகர் தணிகாசலம் தேவகுமாரனை மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it