மாணவியை தகாத உறவுக்கு அழைத்த ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம்!

மாணவியை தகாத உறவுக்கு அழைத்த ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம்!

Share it if you like it

சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம், மாணவி ஒருவரை தகாத உறவுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நந்தனம் பகுதியில் அமைந்திருக்கிறது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஜார்ஜ் ஆப்ரகாம். இவர், கல்லூரியில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. ஆனாலும், கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில், கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அக்கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவி ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்புகாரில், “விடுதியில் தங்கி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம், எனக்கு உதவி செய்வதுபோல நடித்து எனது செல்போன் நம்பரை வாங்கினார். பிறகு, என்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார். மேலும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே, முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்புகாரையடுத்து, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், கல்லூரி முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மீண்டும் கல்லூரிக்கு வந்த முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம், மாணவ, மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம், மாணவி ஒருவரை தகாத உறவுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் ஒரு மாணவியிடம் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்த, அதற்கு அந்த மாணவியோ வெளிப்படையாகவே, “சார் நீங்க என்னை கூப்புடுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது” என்று சொல்வதும், அதற்கு அந்த நபர், “கல்லூரி முதல்வராக இருந்தாலும், துணை வேந்தராக இருந்தாலும் நானும் மனிதன்தானே” என்று சொல்வதும் பதிவாகி இருக்கிறது.

மேலும், ஒரு கட்டத்தில் அந்த மாணவி, “நீங்க என்னை அந்த மாதிரி யோசித்தது ரொம்ப தப்பு” என்று சொன்னதும், “நான்தான் கையெழுத்துப் போட வேண்டும்” என்று மிரட்டுவதும், பிறகு சாமாளித்துக் கொண்டு, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இது நமக்குள் இருக்கும் மைன்ட் அன்டர்ஸ்டாண்டிங்தான் என்றும் சொல்லி சமாளிக்கிறார். இப்படியாக ஆடியோ நீள்கிறது. இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கேட்ட பலரும் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மட்டுமல்லாது, கல்லூரி நிர்வாகத்தையும் கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள்.


Share it if you like it