சேர, சோழ, பாண்டியர்கள் பல நாடுகளுடன் கடல் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தனர்- ஜனாதிபதி திரவுபதி முர்மு

சேர, சோழ, பாண்டியர்கள் பல நாடுகளுடன் கடல் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தனர்- ஜனாதிபதி திரவுபதி முர்மு

Share it if you like it

சர்வதேச கடல்சார் இந்தியா உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வு இந்தியாவின் கடல்சார் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சவால்களை அறியவும், முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்துறையின் முக்கிய நபர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 2023 அக்டோபர் 17-19-ம் தேதி வரை, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது :-

சர்வதேச கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இது ‘அமிர்த கால தொலைநோக்கு 2047’ ஐ அடைவதற்கு உதவும். ‘வளர்ச்சிக்கான துறைமுகங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான துறைமுகங்கள்’ என்ற தனது தொலைநோக்கை நிறைவேற்ற இந்திய அரசு உழைக்கிறது:

நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகள் சிறந்த நிபுணர்கள், வல்லுநர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்கியுள்ளது:

பல்லவர்கள் சக்திவாய்ந்த கடற்படையைக் கொண்டிருந்தனர். 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில், யாருக்கும் நிகரற்றதாக இருந்த நமது சோழர்களின் கடல்சார் வல்லமையும் திறமையும் நமது வணிகத்தையும் பாரம்பரியத்தையும் தொலைதூர நாடுகளுக்கும் விரிவுபடுத்தியது:

தமிழகம் கடலோடிகளின் பூமியாக இருந்து வருகிறது. தென்கிழக்காசியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன:

தென்னிந்தியாவின் சேர, சோழ, பாண்டியர்கள் சுமத்ரா, ஜாவா, மலாய் தீபகற்பம், தாய்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் கடல் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தனர்.


Share it if you like it