எங்கே செல்கிறது தமிழகம்… பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்!

எங்கே செல்கிறது தமிழகம்… பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்!

Share it if you like it

சிதம்பரத்தில் பஸ் ஸ்டாப்பில் வைத்து பலரது முன்னிலையில் பள்ளி மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இச்சம்பவம் தமிழகம் எங்கே செல்கிறது என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

தமிழகத்தில் கலாசார சீரழிவு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திராவிடம் என்கிற பெயரில் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். திருமணம் கடந்த உறவு என்று சொல்லி, பல குடும்ப பெண்களின் வாழ்க்கையை சிலர் சீரழித்து வருகிறார்கள். தவிர, கள்ளக்காதலால் நேரும் கொலைகள் ஏராளம். கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொல்வதும், கணவன் மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதோடு, மதமாற்ற கும்பலால் மேற்கத்திய கலாசாரமும் தமிழகத்தை பாடாய் படுத்தி வருகிறது. இதனால், தமிழகத்தில் கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அடங்க மறு, அத்துமீறு என்ற பெயரில் ஒரு கும்பல் நாடகக் காதலால் பள்ளி, கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் பட்டப்பகலில் பொதுவெளியில் பள்ளி மாணவி ஒருவருக்கு, கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வரும் மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த சூழலில், இருவருக்கும் திருமணம் செய்துவைக்க அந்த மாணவரின் நண்பர்கள் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, மஞ்சள் மற்றும் மஞ்சள் கயிறையும் வாங்கி அம்மாணவிக்கு தாலி கட்ட வைத்திருக்கிறார்கள். இதில், வேதனை என்னவென்றால், பட்டப்பகலில் பொதுவெளியான சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் வைத்து தாலி கட்டியிருப்பதுதான்.

சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் காதல் ஜோடி அமர்ந்திருக்க, நண்பர்கள் முன்னிலையில் அந்த மாணவர் மஞ்சள் கயிற்றை மாணவியின் கழுத்தில் கட்டுகிறார். அப்போது, திருமணத்தில் அட்சதை போடுவதுபோல அவர்கள் மீது நண்பர்கள் பூக்களை தூவி ஆரவாரம் செய்கின்றனர். அப்போது, அந்த மாணவி வெட்கத்தில் சிரிக்கிறார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்த மாணவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்ததோடு, அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்து விட்டனர். இது பள்ளி மாணவியின் பெற்றோருக்குத் தெரியவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தார்களா என்பது தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ அனைத்து பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it