இயேசுவே உண்மையான கடவுள்  என்றவருக்கு மரண தண்டனை!

இயேசுவே உண்மையான கடவுள் என்றவருக்கு மரண தண்டனை!

Share it if you like it

பாகிஸ்தானில் ‘இயேசு தான் உயர்ந்தவர்’ என்று கூறிய கிறிஸ்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ மெக்கானிக் அஷ்ஃபாக் மசிஹ் என்பவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2017 – ஆம் ஆண்டு, லாகூரை சேர்ந்த நபர் ஒருவரின் டூவீலரை மசிஹ் பழுது நீக்கி கொடுத்து இருக்கிறார். அந்தவகையில், தனது கூலியினை மெக்கானிக் கேட்டு இருக்கிறார். இதற்கு, ​​வாடிக்கையாளர் முழுத் தொகையையும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து, முகமது நபியை மெக்கானிக் “அவமரியாதை செய்து விட்டதாகவும், கிறிஸ்தவர்களுக்கு இயேசுவே உயர்ந்தவர் என்று மசிஹ் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அவர் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தவகையில், இயேசுவை இறுதித் தீர்க்கதரிசி என்று கூறி இஸ்லாத்தை அஷ்ஃபாக் அவமதித்து விட்டதாக கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் தற்பொழுது அவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி பேசும் வீரமணி அவர்கள் பாகிஸ்தானின் இந்த இழி செயலை உடனே கண்டிக்க முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

/https://mediyaan.com/qr-line-against-islam-violence/


Share it if you like it