மதமாற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் : விரட்டியடித்த இந்து முன்னணி !

மதமாற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் : விரட்டியடித்த இந்து முன்னணி !

Share it if you like it

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 50 க்கும் மேற்பட்ட அப்போஸ்தல கிருஸ்துவ சபையை சேர்ந்த கிறிஸ்துவ மிஷனரிகள் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணி அமைப்பினர் விரட்டியடித்துள்ள நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணியின் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

காஞ்சிபுரம் அருகே ஒரு ஊரையே மதமாற்றம் செய்ய முயன்ற கிருஸ்துவர்களை, பொதுமக்களை இணைத்து திருப்பியனுப்பிய இந்துமுன்னணியினர்…

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், புரிசை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட அப்போஸ்தல கிருஸ்துவ சபையை சேர்ந்த நபர்கள், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து உடனே அங்கு சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்கள், அங்குள்ள பொதுமக்களை இணைத்து, மதமாற்ற கும்பலை திருப்பியனுப்பினர். மேலும் இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

https://x.com/hindumunnani_tn/status/1757740903412961321?s=20


Share it if you like it