நள்ளிரவில் கதவை தட்டி மதமாற்றம்?!

நள்ளிரவில் கதவை தட்டி மதமாற்றம்?!

Share it if you like it

அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்ற வந்த கிறிஸ்தவ மிஷநரிகளை கரூர் மக்கள் விரட்டியடித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, தி.மு.க.வின் ஆதரவாளர்களில் தொடங்கி அக்கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரை பேசி வருகின்றனர். இதுதவிர, தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ள காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதுதவிர, ஸ்டாலின் ஆட்சியில் கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் கை ஓங்கியுள்ளது. இதனை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், கரூர் மாவட்டத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு கிறிஸ்தவ மிஷநரி குழு ஒன்று நள்ளிரவு சென்று இருக்கிறது. இதையடுத்து, ஊருக்குள் புகுந்த மிஷநரிகள் மக்களுக்கு பிட் நோட்டிஸ் வழங்கி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, ஜெபம் செய்வதாக கூறிக்கொண்டு மதமாற்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். மிஷநரிகளின், உண்மையான சுயரூபத்தை அறிந்தவர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், மதமாற்றம் செய்ய முயன்றவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it