தேவனின் நம்பிக்கையை அவமதித்தால் கொலை செய்து விடு… குழந்தைகளுக்கு வன்மத்தை திணித்த பாதிரியார்!

தேவனின் நம்பிக்கையை அவமதித்தால் கொலை செய்து விடு… குழந்தைகளுக்கு வன்மத்தை திணித்த பாதிரியார்!

Share it if you like it

தேவனின் நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கொன்று விட வேண்டும் என கிறிஸ்தவ பாதிரியார் சாது சுந்தர் செல்வராஜ் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதாக கூறிக்கொண்டு, அவர்களின் அறியாமை மற்றும் வறுமையை பயன்படுத்தி அந்நிய நாடுகளில் இருந்து பணம் பெற்று கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்களை மட்டுமே வளப்படுத்தி கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இன்று வரை உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மோகன் சி லாசரஸ், பால் தினகரன், போன்றவர்கள் முன்பு இருந்த வாழ்க்கைக்கும் தற்போது அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்த்தால் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மேற்கூறிய பாதிரியார்கள், வரிசையில் இருப்பவர் சாது சுந்தர் செல்வராஜ். இவர், போதனை செய்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் பொய்யான தகவலை பரப்புவதை நோக்கமாக கொண்டவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அந்த வகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசியின் பலனாக, கோடிகணக்கான மக்களின் உயிர்கள் இன்று காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. கொரோனா தடுப்பூசியை யாரும் போட கூடாது. அதில், சாத்தானின் சிப் உள்ளது என கிறிஸ்தவ மக்களிடம் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியவர் இந்த சாது சுந்தர் செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவ ஊடகமான ஏஞ்சல் டிவி அண்மையில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாது சுந்தர் செல்வராஜ், தேவன் நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் அது அம்மா, அப்பா, தம்பி, தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை குத்தி கொலை செய்து விட வேண்டும் என குழந்தைகள் மனதில் வன்மத்தை திணித்து இருக்கிறார். இக்காணொளி தான், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

பாவம் செய்ய குழந்தைகளை தூண்டும் இவரை போன்ற கிறிஸ்தவ பாதிரியார்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன்.


Share it if you like it