ஸ்டாலின் மீது மூன்று ஆவி இறங்கியுள்ளது கனிமொழியிடம் கூறிய கிறிஸ்தவ மதபோதகர்..!

ஸ்டாலின் மீது மூன்று ஆவி இறங்கியுள்ளது கனிமொழியிடம் கூறிய கிறிஸ்தவ மதபோதகர்..!

Share it if you like it

ஜி.பி. முத்துவிற்கு கடும் போட்டியை உருவாக்கும் விதமாக.. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களை இன்று வரை சிரிக்க வைத்து வருகிறார் என்பது தி.மு.க மூத்த தலைவர்களே வெளிப்படையாகவே கருத்து கூறும் நிலை உள்ளது.

திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தி.மு.க எம்.பி., கனிமொழி., திருமண மண்டபம் ஒன்றில், கிறிஸ்துவ சபை நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி உள்ளார்..

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஆகிய மூன்று பேரின் ஆவி, ஸ்டாலின் மீது இறங்கியுள்ளது. அதனால் தான் அவர், இவ்வளவு வேகமாக இயங்குகிறார்’ என்று கூறியுள்ளார்.. ஆஹா இது அல்லவா பகுத்தறிவு கட்சி பலர் கருத்து கூறியுள்ளதாக தினமலரில் செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it