எங்களின் பேங்க் பேலன்ஸ் ‘ஜீரோ’: அய்யோ பாவம் பால்தினகரன் மனைவி!

எங்களின் பேங்க் பேலன்ஸ் ‘ஜீரோ’: அய்யோ பாவம் பால்தினகரன் மனைவி!

Share it if you like it

எங்களின் பேங்க் பேலன்ஸ் வெறும் ‘0’ என்று பால்தினகரன் மனைவி இவாஞ்சலின் பேசியிருக்கும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல கிறிஸ்தவ மதபோதகராக அறியப்படுபவர்களில் பால்தினகரனும் ஒருவர். இவர், ஏசு அழைக்கிறார் என்கிற கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருகிறார். இவரது, கிறிஸ்தவ அமைப்பு மிகப்பெரிய பணக்கார அமைப்பு என்று பலராலும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், பால் தினகரன் மனைவி இவாஞ்சலின் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அக்காணொளியில் பேசும் இவாஞ்சலின், “ஏசு அழைக்கிறார் அமைப்பிற்கு பணம் கொடுக்காதீர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். காரணம், அவர்கள் பணக்கார ஊழியர்கள் என்று சொல்லி வருகிறார்கள். நாங்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பணம் இல்லாமல் ஊழியம் செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது. எங்களின் பேங்க் பேலன்ஸ் வெறும் ‘0’ மட்டுமே. அவர்கள் வந்து வேண்டுமானால் பார்த்து கொள்ளட்டும். ஊழியத்திற்கு கொடுக்கும் பணத்தை எல்லாம் ஊழியத்திற்கே நாங்கள் கொடுத்து வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

பால்தினகரன் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்து வருபவர். மேலும், காருண்யா என்கிற பெயரில் கல்வி அறக்கட்டளை வைத்து நடத்தி வருகிறார். அப்படிப்பட்டவரின் வங்கிக் கணக்கில் வெறும் ஜீரோ ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Image


Share it if you like it