17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார்!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார்!

Share it if you like it

காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கிறிஸ்தவ பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களை வைத்து காப்பகம் ஒன்றை நடத்தி வந்தவர் பாதிரியார் சார்லஸ் (வயது 59). இவர், தனது காப்பகத்தில் உள்ள 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, காவல்துறையில் பாதிரியார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஒரு வருடமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பாதிரியாரை சென்னை கோயம்பேட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்தான செய்தியினை பிரபல ஊடகமான தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் இதோ.

https://twitter.com/mohamedathau/status/1570319497831272454?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570319497831272454%7Ctwgr%5E30f989d1850242b12b75a1982ded3ae0e1135566%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fsexual-complaint-christian-priest%2F

Share it if you like it