கோவில் இடத்தில் சர்ச் : இந்து முன்னணி மாஸ் என்ட்ரி : விநாயகர் சிலை பிரதிஷ்டை !

கோவில் இடத்தில் சர்ச் : இந்து முன்னணி மாஸ் என்ட்ரி : விநாயகர் சிலை பிரதிஷ்டை !

Share it if you like it

ஹிந்து கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சர்ச் கட்டுவதற்கு முயன்றதாக இந்து முன்னணி பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

மதுரை மாநகர் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில், இந்து மத வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் (15 சென்ட் இடம், அதன் மதிப்பு 2 கோடி ரூபாய்), ஒரு கிறிஸ்தவர் ஆக்கிரமிப்பு செய்து சர்ச் கட்டுவதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் இந்து முன்னணிக்கு தகவல் தெரிந்து, பின்பு விசாரித்து, அதன் பின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்பு மதுரை நீதிமன்றம் அந்த இடத்தில் இந்து கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. அதன்பின் இன்று விநாயகர், நாகம்மாள் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விரைவில் கோவில் கட்டும் பணி நடைபெற இருக்கின்றது. இது இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!!


Share it if you like it