வகுப்பறையில் சரக்கு அடித்த மாணவிகள்!

வகுப்பறையில் சரக்கு அடித்த மாணவிகள்!

Share it if you like it

காஞ்சிபுர மாவட்டத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் மது குடித்த காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் போற்றி பாராட்டி வந்தன. ஆனால், இன்று நிலைமையோ முற்றிலும் மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை. ஆண்கள் மட்டுமே குடித்த காலம் மலையேறி, தற்போது பெண்களும் குடிக்கும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகள் குடிக்கும் காணொளிகள் பொதுமக்கள் மத்தியில் அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில், தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சிலர் வகுப்பறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடித்த காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை, நீடித்தால் தமிழகம் வெகுவிரைவில் தனது தனித்தன்மையை இழந்து விடும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it