முதல்வருக்கு ஏன் இந்த திடீர் பதற்றம்… தி.மு.க. மூத்த தலைவர் சரமாரி கேள்வி?

முதல்வருக்கு ஏன் இந்த திடீர் பதற்றம்… தி.மு.க. மூத்த தலைவர் சரமாரி கேள்வி?

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் கே.எஸ். ராதா கிருஷ்ணன் தமிழக முதல்வரிடம் சரமாரியான கேள்வியினை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது, தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் midnight காவல் துறையின் அத்து மீறல், 2G சிக்கல் நேரத்தில் இல்லாத பதட்டம் இப்போது ஏன்? அந்த சமயங்களில் உடன் இருந்த கடுமையான நாட்களில் திமுகவில் பணி ஆற்றியவன். இதே செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் கடுமையாக ஊழல் குற்றம் சாட்டியது நாடு மறந்து விடவில்லை… இதன் தொடர்ச்சி எங்கு முடியுமோ?

அ.தி.மு.க., ஆட்சியில், தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த முறை அமைச்சர் அலுவலகத்தில். முதல்வர் வெளிநாட்டில் இருந்தபோது ஏன் ரெய்டு என்று திமுகவினர் குழந்தை போல் அழுதனர் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it