ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர்களுக்கு கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர்களுக்கு கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Share it if you like it

ஈ.மு கோழி மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று அந்நிறுவனம் திட்டம் ஒன்றினை அறிவித்தது.. தி.க.வின் தீவிர ஆதரவாளரும், பிரபல நடிகருமான சத்தியராஜ் போன்றவர்களை வைத்து ஈ.மு. நிறுவனம் மிகப் பெரிய விளம்பரம் செய்தது..

பிரபல நடிகரின் பேச்சை நம்பி பல அப்பாவி மக்கள் அத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. கோடிக்கணக்கில் பணம் வசூல் ஆனவுடன் அந்நிறுவனம்  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..

இதனால் பாதிப்பு அடைந்த மக்கள் நீதி வேண்டி காவல்துறையில் புகார் கொடுத்ததன்.. அடிப்படையில் குற்றவாளிகளுக்கு அண்மையில் கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது…

காசுக்கு ஆசைப்பட்டு உண்மை தன்மையை அறியாமல் விளம்பரத்தில் நடித்த சத்திய ராஜ் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it