ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் அதற்கு தேவையான பணிகளை மிகவும் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஹிந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு, ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆலயத்தில் வைத்து ஒரு வாரம் பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு பூஜைகள் செய்து கலச நீரை அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.