வடகொரிய அதிபர் மக்கள் சிரிக்க தடை போட்ட செய்தி அறிந்து உலக நாடுகள் அதிர்ச்சி..
வட கொரியாவின் தற்பொழுதைய சர்வாதிகாரியும் அதிபருமான கிம் ஜாங் உன் தனது தந்தையும் மறைந்த முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினம் வருவதையொட்டி நாட்டு மக்கள் 10 நாட்கள் சிரிக்க தடை விதித்து உள்ளார். பிறந்த நாள், திருமண விழா, என அனைத்திற்கும் கடும் கட்டுப்பாடுகளை வடகொரிய கம்யூனிச அரசு அறிவித்து உள்ளது.
வடகொரிய அரசின் நடவடிக்கையை மீறி செயல்படும் மக்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கம்யூனிசம் பற்றி வாய் கிழிய பேசும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் இது குறித்து பேச முன்வருவார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.