அயோக்கியர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடுபவர்களையும் கொண்ட கட்சி நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஈ.வெ.ரா-வின் பிறந்த நாளை கொண்டாடிய தோழர்கள்…!

அயோக்கியர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடுபவர்களையும் கொண்ட கட்சி நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஈ.வெ.ரா-வின் பிறந்த நாளை கொண்டாடிய தோழர்கள்…!

Share it if you like it

ஈ.வெ.ரா பிறந்த தினத்தை தி.மு.க, தி.க, வி.சி.க, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், உட்பட, பலர் தங்கள் ஆதாயத்தை கருத்தில் கொண்டு அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஈ.வெ.ரா-விற்கு சுந்தரவள்ளி, அருணன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வாழ்த்து கூறி வருவதற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஈ.வெ.ரா-வின் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.

பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.

இதற்கு பா.ஜ.க இளம் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜி சூர்யா கம்யூனிஸ்ட் குறித்து ஈ.வெ.ரா தெரிவித்த கருத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்

கம்யூனிஸ்ட்டுகளை எடுத்து கொள்வோம். உலகத்தில் அறிவு பிறக்குமிடம் அங்கேதான் உள்ளது என்பார்கள். ஆனால் நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டகாரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடும் அராஜகர்களையும் கொண்டுள்ளது. -ஈ.வெ.ரா, விடுதலை 5.8.55


Share it if you like it