எனக்குதான் சீட்டு: ஈரோடு மாவட்ட காங்., தலைவர் கண்ணீர்!

எனக்குதான் சீட்டு: ஈரோடு மாவட்ட காங்., தலைவர் கண்ணீர்!

Share it if you like it

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈவேரா. அண்மையில் இவர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து, அவர் வகித்து வந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it