மின்வாரிய ஊழியர்களை விரட்டியடித்த கிராம மக்கள்!

மின்வாரிய ஊழியர்களை விரட்டியடித்த கிராம மக்கள்!

Share it if you like it

கர்நாடகாவில் காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதி இன்று அவர்களுக்கே மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என அக்கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இப்படிப்பட்ட சூழல் நிலையில், கர்நாடக மாநிலம் ஜல்லிக்கட்டே கிராமத்தை சேர்ந்த மக்கள், “காங்கிரஸ் இப்போது ஆட்சியில் உள்ளது. ஆகவே, நாங்கள் மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறியுள்ளனர். மேலும், மின்மீட்டரை ரீடிங் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். இச்சம்பவம், அம்மாநிலம் முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it