சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில், வழக்கம் போல மத்திய பா.ஜ.க. அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். மேலும், அந்த அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். தவிர, அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் கை கோர்த்து செயல்பட தயார் என்று கூறியுள்ளார்.

இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய சட்டத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சோனியா காந்தி அரசியல் சாசனத்தை பற்றி வெகுவாக பேசி இருக்கிறார். நீதித்துறையின் சுதந்திரம் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுகிறது. இது நேர்மையற்ற மாயையான அறிக்கை” என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it