காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: போராட்டத்தில் குதித்த பஜ்ரங் தள்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: போராட்டத்தில் குதித்த பஜ்ரங் தள்!

Share it if you like it

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இதற்கு, அந்த அமைப்பினர் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே-10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it