நீதிபதி நாக்கை அறுப்போம்: காங்கிரஸ் தொ(கு)ண்டர் சர்ச்சை கருத்து!

நீதிபதி நாக்கை அறுப்போம்: காங்கிரஸ் தொ(கு)ண்டர் சர்ச்சை கருத்து!

Share it if you like it

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் பேச்சாளர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் திருடர்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுலின் இந்த கருத்து அச்சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, மோடி சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வகையில், சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பேசும் போது காங்கிரஸ் இவ்வாறு கூறினார் ;

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என பேசியிருக்கிறார். இவரின், பேச்சுதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it