ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடிய தோழர்கள்!

ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடிய தோழர்கள்!

Share it if you like it

ராகுல் காந்தியின் அலுவலகத்தை SFI தோழர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநில வயநாடு எம்பியுமாக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, கட்சியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஏதோ ஒரு கருத்தினை பதிவு செய்து இருக்கிறார். இதனால், கடும் கோவம் அடைந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இருக்கின்றனர். இதுதவிர, ராகுலின் அலுவலகத்தை அடித்து நொறுக்கி இருக்கும் சம்பவம் தான் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது;

இன்று பிற்பகல் 3 மணியளவில், வயநாடு எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை SFI தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மேலும், அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஊழியர்களை மிக கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். இதற்கு, என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it