‘அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட்’: ஜெய்சங்கரை புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

‘அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட்’: ஜெய்சங்கரை புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

Share it if you like it

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு ஸ்பெஷலிஸ்ட். அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தற்காக மோடியை பாராட்டுகிறேன் என்று சசி தரூர் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர். முன்னாள் அமைச்சரான இவர், வெளியுறவுத்துறை இணையமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “வெளியுறவுத்துறைக்கு ஒரு நல்ல ஸ்பெஷலிஸ்ட்தான் தேவை. அந்த வகையில், ஜெய்சங்கர் மிகவும் திறமைசாலி. அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தது மோடியின் நல்ல முடிவு. அதேபோல, முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹரிதீப் சிங் பூரி, முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் ஆகியோரையும் அரசியலில் ஈடுபடுத்தியது மோடியின் திறமைக்கு ஒரு சான்று” என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பா.ஜ.க.வைச் சேர்ந்த பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்புவும் இக்காணொளியை பகிர்ந்திருக்கிறார். இதை ஏராளமானோர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.


Share it if you like it