காங்கிரசின் டூல்கிட்டும் – இந்தியாவின் டூல்கிட்டான காங்கிரசும் – ஒரு அரசியல் பார்வை

காங்கிரசின் டூல்கிட்டும் – இந்தியாவின் டூல்கிட்டான காங்கிரசும் – ஒரு அரசியல் பார்வை

Share it if you like it

காங்கிரசின் சிந்தனையும் ஆட்சியின் தோரணையும் அவர்கள் ஏதோ மன்னர் வகையறா போலவும் இந்த தேசத்தின் மக்கள் எல்லாம் வெறும் வாக்களிக்கும் பிண்டங்கள் என்ற ரீதியில் தான் இருந்தது. அந்தப் போக்கில் அது முதலாளிகளுக்கான அரசாக, அதிலும் லஞ்சம் – ஊழல் என்று பணம் கொழிக்கும் நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு புகலிடமாக, நேரு குடும்பத்தின் துதி பாடுபவர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் அரசியல் அதிகாரம் பெற்றுத்தரும் முகமை மையமாகவே செயல்பட்டு வந்தது. அவர்களின் பார்வையில் சாமானிய மக்களும் சிறுபான்மை மற்றும் பட்டியல் சமூக மக்கள் எல்லாம் வெறும் வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் போலத்தான். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வரி செலுத்தும் இயந்திரங்கள் அல்லது அவர்களுக்காக அரசியல் செய்ய வந்த அடிமைகள் என்ற அளவில் தான் அவர்களின் பார்வையும் செய்கையும் இருந்தது.

காங்கிரஸ் கட்சி ஆட்சி – பொது மக்கள் இடையே இருந்த இந்த வெற்றிட இடைவெளியை பயன்படுத்தி அவர்கள் எப்போதும் அதிகார தோரணையோடு ஆகாயத்தில் இறங்கி வந்த அவதாரங்களைப் போல தங்களை காட்டிக் கொண்டார்கள். சாமானிய மக்களும் ஒரு அச்சத்தோடு விலகி நின்றார்கள். அரசியல் விழிப்புணர்வு ஏதுமின்றி மேல்மட்டத்தில் என்ன நடக்கிறது ? என்ற குறைந்தபட்ச விவரம் கூட இல்லாமல் இடையில் இருந்த இரும்பு திரையால் மக்கள் தங்களின் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பான காங்கிரசிற்கே தொடர்ந்து வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.

ஆனால் தர்மத்தின் தீர்ப்பாகவும் காங்கிரஸின் கர்ம வினையாகவும் ஜன சங்கம் உதித்ததும் அது பாரதிய ஜனதா கட்சியாக மெல்ல மெல்ல உருவெடுத்ததும் கட்சி பிறந்து 30 ஆண்டுகளில் கூட்டணியில் ஆட்சி 40 ஆண்டுகளுக்குள் அசுர பலத்தோடு மத்தியில் ஆட்சி என்ற அளவில் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்பதும் காங்கிரசுக்கும் அதன் அதிகார தோரணைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. தங்களை மீறி யாரும் இல்லை. யாரும் வரவும் முடியாது . வந்தாலும் நிலைக்க முடியாது என்ற இறுமாப்பில் இருந்தவர்களுக்கு சாதாரண குடும்பங்களில் பிறந்து வளர்ந்து தங்களது அர்ப்பணிப்பான பொது வாழ்க்கையாலும் இந்த மண்ணிலும் மக்களின் மீதும் கொண்ட அப்பழுக்கில்லாத பற்றுதலாலும் இந்த தேசத்தின் உயர்ந்த அரியணையை அலங்கரிக்கும் அதிகார ஆளுமைகளாக பாஜகவினர் வளர்ந்ததை காங்கிரசின் நேரு குடும்ப அகம்பாவிகளால் ஜீரணிக்க முடியவில்லை

காங்கிரசின் நேரு குடும்பம் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தாலும் கடைக்கோடி கிராமத்தில் கூட பயணம் செய்த போதிலும் அது வெறும் அரசியல் சுற்றுப் பயணமாக இருந்ததே தவிர கடைகோடி மக்களிடம் மனதளவில் அவர்களை நிலை நிறுத்தும் ஆத்ம பந்தமாக மாறவே இல்லை. காரணம் அவர்களிடத்தில் இந்த தேசம் – பாரம்பரியம் – கலாச்சாரம் – இந்த மண்ணிற்கான தேசிய உணர்வு என்ற எந்த அடையாளமும் இல்லாமல் போனதும். மக்களின் மீது உள்ளார்ந்த அன்போ அபிமானமோ இல்லாமல் வெறும் பாசாங்கு அரசியல் செய்ததுமே காரணமானது.

இன்று வரை காங்கிரசின் இளவரசர் குடிசைகளில் புகுந்து கூழ் குடித்தும் , இளவரசி வயல்வெளியில் அமர்ந்து விவசாய கூலிகளிடம் அளவளாவியும் பரம்பரை தொகுதியான அமேதியின் வெற்றியை கூட தக்க வைக்க முடியாத அவல நிலைக்கு காரணம் இதுவே. ஆனால் அவர்கள் அதை உணரவோ தவறுகளை திருத்திக் கொள்ளவோ தயாரில்லை. மாறாக அதை விட பெரிய தவறுககளை செய்யவும் எந்த விலை கொடுத்தேனும் பாரதத்தின் அரியணையை தங்களின் குடும்பத்தின் கட்சியின் அடமான பொருளாக மாற்றவும் கங்கணம் கட்டி அலைகிறது.

வாஜ்பாய் என்ற மாமனிதருக்கு எதிராக தெஹல்கா என்ற சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டை இட்டுக்கட்டி ஊடகங்களின் பலம் கொண்டு உள்நாட்டு அயல்நாட்டு சதிகாரர்களின் உதவியோடு 2004 ல் வாஜ்பாயை வீழ்த்தி மன்மோகன் சிங் தலைமையில் மீண்டும் தேசத்தின் அரியணையை கைப்பற்றியது. அடுத்த 10 ஆண்டுகால மன்மோகன் சிங் ஆட்சியில் வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயரெடுத்த சீக்கிய அடையாளமாக இருக்க வேண்டியவரை வெறும் கைப்பாவையாக பயன்படுத்தி காங்கிரசின் தலைமை குடும்பம் தங்களது கடந்த கால அதிகார தோரணையும் அகம்பாவ அரசியலையுமே தொடர்ந்தது.

விழிப்ப்படைந்த பெரும்பான்மை மக்கள் தங்களும் தங்கள் சந்ததியும் இந்த மண்ணில் சுய கௌரவமாக வாழ வேண்டும் எனில் பாஜகவின் ஆட்சி வேண்டும் என்று மோடியின் பின்னே அணி திரண்டார்கள். 2014 ல் மோடி பதவியேற்ற பிறகு அவர் செய்த ஒவ்வொரு செய்கைக்கும் பின்னே இந்த தேசத்தின் நலனும் மக்களின் பாதுகாப்பும் எதிர்கால சந்ததிகளின் நலனும் மட்டுமே இருந்தது. அவர் எந்த குடிசையிலும் கூழ் வாங்கி குடிக்கவில்லை. ஆனால் பாரதத்தில் குடிசை வீடுகளே இல்லாமல் மோடி வீடு என்னும் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான வீடு என்ற திட்டத்தை சாத்தியமாக்கினார்.

அவர் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவரோ செல்விகமான வளர்ப்பில் வளர்ந்தவரோ அல்ல. ஆனால் இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் இந்த பாரதத்தின் வருங்கால தலைவனாக அடையாளப்படுத்தினார் . குடியரசு தலைவர் பதவி முதல் முக்கிய அமைச்சரவை சகாக்கள் வரை தகுதியும் திறமையும் வாய்ந்த ரத்தினங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பொறுப்பில் அமர்த்தினார். அவர்களும் தாங்கள் வகிப்பது அதிகாரம் மிக்க பதவி அல்ல. மக்கள் சேவைக்கான பொறுப்பு என்பதை உணர்ந்து அர்ப்பணிப்போடு கடமையாற்றினார்கள். அதை மக்கள் உணர்ந்தார்கள். 2019 லும் மீண்டும் மோடியையே தேர்ந்தெடுத்தார்கள். இதோ பெரும்பான்மை மக்கள் மீண்டும் மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுக்க தயாராகிறார்கள்.

ஒன்று இந்த மண்ணை தாங்கள் ஆள வேண்டும் அல்லது இந்த மண்ணை ஆள்பவர்கள் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் . இரண்டும் இல்லையேல் இந்த தேசமும் மக்களும் அழிவின் விளிம்பில் நிற்க வேண்டும் என்ற கொடூர மனம் படைத்த காங்கிரஸ் எப்பாடுபட்டாவது மோடியின் நல்லாட்சியை சீர்குலைக்க வேண்டும், மக்களின் மனதில் அவநம்பிக்கை – அதிருப்தி – அச்சத்தை விளைவித்து அதன் மூலம் ஏற்படும் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஊடகங்களின் துணையோடு தங்களின் வெறுப்பு பிரச்சாரத்திற்கும் விஷம் கருத்துக்களுக்கும் உரிய பலனை தேர்தல் அரசியலாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறுவடை செய்து 2024 ல் மோடியை வீழ்த்தி மீண்டும் தங்களின் குடும்ப அரசியலை நிலை நிறுத்த வேண்டும் என்று அத்தனை பிரயத்தனங்களும் செய்து வருகிறது.

அவர்களுக்கு துணையாக மோடியின் தலைமையில் நாடும் மக்களும் நலம் பெறுவதை விரும்பாத அந்நிய நாட்டு சதிகாரர்களும் உள்நாட்டு துரோகிகளும் ஒருமித்த அணியில் கைகோர்த்து நிற்கிறார்கள். துரோகம் வஞ்சகம் என்பதை தவிர வேறொன்றும் அறியாத ஊடகங்களும் இந்த மாபாவிகளுக்கு துணையாக நிற்கிறது. எதைப் பற்றியும் கவலை இல்லை எனக்கு இன்றைக்கு தேவையான பணமும் பகட்டும் கிடைத்தால் போதும் என்று அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தனி மனிதர்களும் அமைப்புகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் – சமூக நலன் விரும்பிகள் – அரசியல் விமர்சகர்கள் என்ற பல்வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டு காங்கிரசின் இந்த துரோகத்திற்கு துணை போகிறார்கள்.

இந்தியா எந்த வகையிலும் வளமோ பலமோ பெற்று விடக்கூடாது அதன் மூலம் சீனாவிற்கு போட்டியாக வளர்ந்து விடக்கூடாது என்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாத தோழர்களும் தேச துரோகம் என்ற தங்களின் அரசியலுக்கு உற்ற தோழனாக காங்கிரஸோடு இணைந்து பயணிக்கிறார்கள்.

இதன் பலனாக இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் நலம் தரும் வகையில் எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்கிறார்கள் . இந்த தேசத்தை பாதுகாக்கும் வகையில் பலப்படுத்தும் வகையில் செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அக்னி பாத் உள்ளிட்ட ராணுவ திட்டங்களுக்கு கூட எதிர்மறை கருத்துக்களை விதைத்து விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வாக்கு வாங்கி அரசியலுக்காக மத பயங்கரவாதத்தையும் மத மாற்றத்தையும் இந்து – இந்திய விரோதத்தையும் உரம் போட்டு வளர்க்கிறார்கள். இவையெல்லாம் போதாது என்று 2024 தேர்தலுக்கு முன்பாக திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாப்பின்மை – சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – சமூக அமைதிக்கு பங்கம் – அச்சுறுத்தல் உள்ளிட்ட உயிர் அபாயங்களை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் செய்வதன் மூலம் மக்கள் மனதில் ஒரு பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி அதை முன் வைத்து செய்யும் பிண அரசியல் மற்றும் தேர்தல் நேர விஷம பிரச்சாரங்களை பயன்படுத்தி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கும் மோடியை எப்பாடுபட்டாவது மூன்றாவது முறையாக பிரதமராகாமல் தடுக்க வேண்டும் என்றும் திரும்பிய பக்கமெல்லாம் டூல் கிட் சதி செய்கிறார்கள்.

எல்லைக்கு உள்ளும் புறமும் ஸ்திரமான பாதுகாப்பு – தொடர் குண்டு வெடிப்புகள் – தீவிரவாத தாக்குதல் உள்ளிட்டவற்றையெல்லாம் இனி எந்த வகையிலும் தொடர முடியாது . அப்படியே திட்டமிட்டாலும் தேசிய பாதுகாப்பு முகமை – தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அவற்றால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் இந்த தேசத்தை சீர்குலைக்க வேண்டும் எனில் பயங்கரவாத தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் ஆயுதப் பிரயோகம் என்றதை கடந்து தொழில்நுட்ப ரீதியிலான அழிவுச் செயல்கள் – உளவியல் ரீதியான விஷமக் கருத்துக்கள் – ஊடகங்கள் கட்சிகள் அமைப்புகளின் வாயிலாக இதற்கெல்லாம் வலு சேர்க்கும் பிண அரசியல் என்ற அபாயகரமான போக்கை நோக்கி பயணிக்கிறது.

மன்னர் வகையறா போல இருந்தும் நாடு முழுவதும் பயணித்தும் தோற்றவர்கள் கண் முன்னே மோடி சாமானிய மனிதன் தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மன் கீ பாத் என்ற பெயரில் தேசத்தின் கடைக்கோடி மனிதனோடும் உரையாடி ஆத்மார்த்தமாக பிணைந்து. அவர்களில் ஒருவனாக நிலை பெற்று வெற்றி கரமான நல்லாட்சியை முன் எடுப்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? . அதன் வெளிப்பாடு தான் வேளாண் சட்டத்திற்கு திருத்தத்திற்கு எதிரான போராட்டம் என்று தொடங்கி செங்கோட்டையில் தேசியக்கொடியை அவமதித்த நிகழ்வு. குடியுரிமை சட்டதரத்திற்கு எதிரான அறப்போராட்டம் என்று தொடங்கி தேசத்தின் போர்ச் சின்னங்களையும் தேசிய சின்னங்களையும் கூட அழித்த அவமதித்த அவலம். இதையெல்லாம் மக்கள் உணர்ந்து விடக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட விஷம பிரச்சாரம் தொடர்கிறது. இன்னும் எவ்வளவோ சதிகளையும் அரங்கேற்றியது. இதோ மல்யுத்த வீரர்கள் முன் நிறுத்தி பாலியல்பாலியல் குற்றச் சாட்டை முன் வைத்து நீதி வேண்டும் என்று தொடங்கிய போராட்டம் போதிய ஆதரவு இல்லாமல் சதி திட்டம் ஆதாரத்தோடு அம்பலமாகி இன்று காணாமல் போய் விட்டது.

காங்கிரசின் தேச துரோகமும் அதற்காக அவர்கள் முன்னெடுக்கும் டூல் கிட் என்னும் திட்ட மிட்ட சதியையும் முளையிலேயே கண்டறியப்பட்டு முறியடிக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரதம் மீள முடியாத இழப்புகளை சந்திக்க நேரிடலாம். அந்நிலையை தவிர்க்க மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் கொடூர முகத்தை ஆதார பூர்வமாக கொண்டு போய் சேர்த்து அவர்களை விழிப்போடு இருக்க செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள ஒவ்வொரு தேசியவாதியின் விருப்பம்.கடந்த பல ஆண்டுகளாக தங்களின் கை விட்டு போன மத்திய ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தங்கள் கைகளில் கொண்டு வர காங்கிரஸ் உள்நாட்டு பிரிவினைவாதம் பயங்கரவாதம் அந்நிய அடிவருடிகள் துணையோடு பல அஜண்டாக்களை முன் எடுப்பதை பார்க்கிறோம்.

அவ்வகையில் காங்கிரசின் டூல் கிட் எனும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை நன்கறிவோம். ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியே இந்திய விடுதலை போராட்டத்தை மழுங்கடிக்க உருவாக்கப்பட்ட ஒரு டூல் கிட் தான். சுதந்திர இந்தியாவின் அரியணை எந்த காலத்திலும் தங்கள் கைகளை மீறி போக கூடாது என்ற உள்நாட்டு பயங்கரவாத பிரிவினைவாதிகள் மற்றும் இந்தியா எந்த காலத்திலும் முன்னேறி விட கூடாது என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு கூட்டணியில் இன்றளவும் செயல் படும் ஒரு டூல் கிட் தான் என்பதே கசப்பான உண்மை.

இந்தியாவோடு இணைய விரும்பிய நேபாளம் – பூடான் – திபெத் பகுதிகளை தனித்து விட்டது. காஷ்மீர் சிக்கலை வளரவிட்டது. இந்தியா – பாகிஸ்தான் என்று வரும் போது பாகிஸ்தான் பாசம் இந்தியா சீனா என்று வரும் போது சீனா ஆதரவு நிலைப்பாட்டில் இந்தியாவை அச்சுறுத்தும் இழிவான மனநிலை. என்று தன் ஒவ்வொரு அணுவிலும் இந்து இந்திய எதிர்ப்பு ஒன்றையே கடைப்பிடித்து ஆனால் அந்த இந்தியர்கள் தேசிய அடையாளம் கொண்டு இந்துக்கள் ஆன்மீக அடையாளம் கொண்டு ஓருங்கிணைய விடாமல் இன்று வரை பிரிட்டிஷாரின் பாணியில் பிரித்தாளும் சூழ்ச்சியும் வஞ்சகமும் அரசியலாக செய்யும் காங்கிரஸ் கட்சி இன்னமும் இந்திய கட்சி . இந்தியர்களுக்கான கட்சி என்று நினைப்போமானால் நம்மை விட கோமாளிகள் உலகில் இல்லை என்றே அர்த்தம்.


Share it if you like it