தி.மு.க-வை வம்பில் இழுத்து விட்ட கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!

தி.மு.க-வை வம்பில் இழுத்து விட்ட கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!

Share it if you like it

திமுக ஆட்சியில் அமர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் அமைச்சர்களின் பேச்சு, செயல்பாடுகள், மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தி.மு.க ஆட்சியின் மீது ஸ்வீட் பாக்ஸ் புகார், மின்சார புகார், ,என்று அடுக்கடுக்கான பல புகார்களை விடியல் அரசு மீது தெரிவித்தது மட்டுமில்லாமல் அதற்குறிய ஆதாரத்தினையும் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.

இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் அவர்கள் பிரபல ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு திமுக-வின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசி இருந்தார். இதற்கு தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அவர்கள் மின்சாரம் தொடர்பாக ஸ்ரீராம் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக வெகு விரைவில் வெள்ளை அறிக்கையை மின்சார அமைச்சரிடம் கேட்டு வழங்குவேன் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் இன்று வரை கான்ஸ்டன்டைன் அவர்கள் வெள்ளை அறிக்கையை வழங்காமல் மெளனம் காத்து வரும் நிலையில். தி.மு.க நிர்வாகி தனக்கு கொடுத்த வாக்குறுதியை ஏன்? நிறைவேற்றவில்லை என ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

.


Share it if you like it